வெனிசூலாவில் மண்சரிவு; 36 பேர் உயிரிழப்பு

வெனிசுலா நாட்டின் Las Tejerias நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர்.

சுமார் 1,000 பேர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவிப்பதாகவும் வெனிசுலா துணை ஜனாதிபதி டெல்ஸி ரொட்ரிகுவேஸ் (Delcy Rodriguez) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ (Nicolas Maduro) 03 நாட்கள் தேசிய துக்கதினத்தை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here