எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – பஞ்சிகாவத்தை சந்தி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் கோரி சிலர் வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.