கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

பங்களாதேஷூக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணியில் 8 வீரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி டெய்லி ஸ்டார் எனும் பங்களாதேஷ் ஆங்கில நாளிதழ் தகவலின்படி, 8 வீரர்கள் உள்பட உதவியாளர்கள் 3 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அணியிலுள்ள மற்ற வீரர்கள் சில்ஹெட்டில் பயிற்சியைத் தொடங்கினர். ஒருவாரத்துக்குப் பிறகு, ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள சாட்டோகிராமுக்குச் செல்லவுள்ளனர்.

ஒருநாள் ஆட்டங்கள் பெப்ரவரி 23, 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. டி20 தொடர் மார்ச் 3 மற்றும் மார்ச் 5 ஆகிய திகதிகளில் மிர்பூரில் நடைபெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here