எதிர்வரும் புத்தாண்டு காலத்திலிருந்து, நுகர்வோருக்கு ஒரு கிலோ சம்பா அரிசியை ரூபா 125 க்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களுக்காக விசேட நிவாரணங்கள் பலவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.