தடுப்பூசி பெறாதவர்கள் உயிரிழக்க நேரிடும்: ஜோ பைடன்

தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள இனி வரும் காலங்களில் உயிரழக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஓமிக்ரோன் தொற்று அமெரிக்காவினுள் பரவிய போது அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இதற்காக பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதில்லை எனவும் ஜோ பைடன் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆயினும் அண்மைக்காலமாக அமெரிக்காவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் இனி வரும் குளிர்காலப் பகுதியில் உயிரிழப்பதைக் காட்டிலும் வேறு வழி இல்லை என அவர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here