வானிலை தொடர்பான புதிய அறிவிப்பு

நாட்டின் தென்மேற்கு பகுதியில்  நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து வரும் சில நாட்களுக்கும் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here