தேனீ கொட்டுதலுக்கு இலக்காகிய 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நோர்வூட் ஹெல்பொட தமிழ் மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் தேனீ கொட்டுதலுக்கு ஆளாகியுள்ளனர்.

அதன் காரணமாக கொட்டுதலுக்குள்ளாகிய 17 பாடசாலை மாணவர்கள் திக்ஓய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த தேனீ கொட்டுதலுக்கு இலக்காகியுள்ளவர்கள் தரம் 6 – 11 வயதிற்குட்பட்டவர்களென நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வலயக்கல்விப் பணிமனையின் அறிவுறுத்தலுக்கிணங்க குறித்த பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு தற்காலிக விடுமுறை வழங்கியுள்ளார்.

மேலும் தேனீ கொட்டுதலுக்கு இலக்காகியவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் தேனீக்களின் பரவல் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here