நாடு முழுவதிலும் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை எனவும் அது அது தேர்தலுக்கான இலக்கு அல்ல எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.