வெப்பமான வானிலை காரணமாக ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுகளை நடத்துமாறு கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய சுற்றறிக்கை இன்று (18) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
“இது தொடர்பில் முன்பு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது, ஆனால் இன்று பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை ஆண்டு இறுதி வரை ஒத்திவைக்குமாறு மாகாண அதிகாரிகள் ஊடாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது, ஏனெனில் நிலைமை அதற்குள் மாறக்கூடும். முதல் தவணை நிறைவடைய புத்தாண்டின் பின்னரும் இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. நாம் இந்த நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.”
இதேவேளை, இன்று அதிகாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், குருநாகல் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 38.3°C பதிவாகியது.
வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.