
இரண்டாம் கட்டத்தின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை (25) தொடக்கம் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
200-க்கும் அதிக மாணவர்களைக் கொண்ட அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.