சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

சந்தையில் சீனியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சீனிக்கு கட்டுப்பாடு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சந்தையில் அது கடைபிடிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சில பகுதிகளில் சீனி தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அரசாங்கத்தின் தலையீட்டுடன் சீனி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here