
சுற்றுசூழலுக்கு ஏற்ற விவசாய நடவடிக்கைகளுக்காக நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தின் முதல் தொகுதி நாளை (19) இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அதன் முதல் தொகுதியாக 1 இலட்சம் லீட்டர் விஷேட திரவ உரம் நாளைய தினம் இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.