நாட்டின் சில பகுதிகளில் மின் வெட்டு – மின்சக்தி அமைச்சு!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் திருத்த பணிகள் முழுமையடையாத காரணத்தினால் சில பகுதிகளில் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் முழு கொள்ளளவை இணைக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் என அவர் தெரிவித்தார்.

 

Raveenan (JMMC10)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here