இலங்கையில் 10000 ரூபாய் நாணயத்தாள் அறிமுகம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. இந்நிலையில் எவ்வித பொறுப்பும் இன்றி இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து இலங்கை மத்திய வங்கியிடமும், நிதி அமைச்சிடமும் வினவிய போது
அவ்வாறான தகவல்கள் பொய்யானவை எனவும் எந்த விதமான நாணயத்தாள்களும் அச்சிடப்படவில்லை எனவும் நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
எனினும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஆட்டிகல மேலும் தெரிவித்தார்.
ஆகவே, தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற 10000 ரூபாய் நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.