இருவரின் உயிரை பறித்த புதிய வைரஸ்! மேலும் இருவருக்கு பாதிப்பு

கேரளாவில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய அரசின் மருத்துவ நிபுணர்க் குழு கேரளா விரைந்துள்ளது.

நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒருவகை காய்ச்சல், உடல் நல பாதிப்பாகும்.

வௌவால்கள், குதிரைகள், ஆடுமாடுகள், நாய்கள், பூனைகள் போன்ற பலவகை விலங்குகள் மூலமாக வேகமாகப் பரவக்கூடியது நிபா வைரஸ்.

தலைவலி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தெரிவதுடன், சிலருக்கு மூளை பாதிப்பு ஏற்படுத்தி மரணத்தையும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here