உலகை அச்சுறுத்தும் புதிய கொரோனா…

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு சான்றாக, தற்போது புதிய மாறுபாடு உலகம் முழுவதும் பரவி உள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த மாறுபாடு Omicron EG.5.1 அல்லது Eris என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிஸ் மாறுபாடு உலகம் முழுவதும் புதிய கவலைகளைத் தூண்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து எரிஸ் மாறுபாடு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம், உலக சுகாதார அமைப்பு எரிஸ் மாறூபாட்டை ‘கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடு’ என வகைப்படுத்தியது.

எரிஸ் மாறுபாடு கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்தாலும் அது செயலற்றது என்று நிரூபணமனதாக கோவிட் குழு தலைவர் டாக்டர் என்கே அரோரா கூறினார். மேலும் இந்த நாடுகளின் தொற்றுநோயியல் இந்தியாவிலிருந்து வேறுபட்டது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here