கண்டி மாவட்டம் மடவளை மதீனா தேசிய பாடசாலைக்கு இன்றைய தினம் மிகவும் முக்கிய நாளாக அமைந்தது, ஏனெனில் பாடசாலையின் இதயமாக விளங்கும் பாடசாலை ஊடகப் பிரிவு இன்று நிறுவப்பட்டது.

ஊடகத்துறையில் சாதிக்க கூடிய மாணவர்களை உருவாக்கும் நோக்கில் மடவளை மதீனா தேசிய பாடசாலையானது மாணவர் ஊடகப் பிரிவை ஆரம்பித்து வைத்தது. கல்லூரி அதிபர் அ. ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்ந நிகழ்வு இன்று நண்பகல் 12 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஆரம்பமானது. இவ்விழாவில் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
இன்றைய நிகழ்வில் பாடசாலை செய்திகளை ஏந்திய சஞ்சிகையொன்று வெளியிடப்பட்டதுடன் பாடசாலையின் ஊடகப்பிரிவின் மாணவர்களால் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்ச்சிகள் அதிதிகளின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் கலந்துகொண்ட அதிதிகளால் அவர்கள் பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.