கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை வீரர்கள் இருவர் விபத்து

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் 42.5 ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற இலங்கை வீரர்கள் இருவர் ஒருவருடன் ஒருவர் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

ஜெப்ரி வென்டர்ஸே மற்றும் அஷேன் பண்டார ஆகியோரே இவ்வாறு ஒருவருடன் ஒருவர் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

சம்பவத்தை அடுத்து உபாதைக்கு உள்ளான இருவரும் மைதானத்தில் இருந்து உடனடிகாக வௌியே அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here