ஐ.நா. சபையில் இசைப்புயலின் நிகழ்ச்சி.
வருகின்ற 15 ஆம் திகதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது இதையோட்டி ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர் ரஹ்மான் நடத்தவுள்ளார் இது அவருடைய இசைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாகவுள்ளது என குறிப்பிடலாம்.
ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966-ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.